தமிழ்நாடு

நடப்பாண்டிற்கான புதிய ரயில் அட்டவணை- தெற்கு ரயில்வே

புதிய ரயில் அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.மேலும், தமிழகத்தில் முன்பதிவு இல்லாத புதிய ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

நடப்பாண்டிற்கான புதிய ரயில் அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இந்த ரயில் அட்டவணைப்படி, பல ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சில முக்கிய ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்-மும்பை விரைவு ரயில், தாம்பரம்-நெல்லை அந்தியோதியா ரயில், பாண்டியன் விரைவு ரயில், சிலம்பு விரைவு ரயில், திருச்செந்தூர் விரைவு ரயில், நெல்லை விரைவு ரயில் உள்ளிட்ட பல ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் - செங்கோட்டை இடையே புதிய முன்பதிவில்லாத அந்தியோதயா விரைவு ரயில் தினசரி காலை 7 மணிக்கு இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கவுகாத்தி மற்றும் திப்ரூகர் விரைவு ரயில்கள் தாம்பரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திருச்சி-நாகூர் விரைவு பயணிகள் ரயில் காரைக்கால் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் - திருச்சி சோழன் விரைவு ரயில் காலை 8.30 மணிக்கு பதிலாக 8.00 மணிக்கு புறப்படும் என்றும்,

சென்னை எழும்பூர் - செங்கோட்டை விரைவு ரயில் இரவு 8.20 மணிக்கு பதிலாக, 8.40 மணிக்கு புறப்படும் என்றும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

அதேபோல் செங்கல்பட்டு - கச்சிகுடா விரைவு ரயில் மாலை 5.00 மணிக்கு பதிலாக 4.45 மணிக்கு புறப்படும் என்று புதிய ரயில்வே அட்டவணையில் கூறப்பட்டுள்ளது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்