தமிழ்நாடு

தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கியது

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, ஜி. உசிலம்பட்டி, கண்டமனூர், ஆத்தங்கரைப்பட்டி, கோவிந்த நகரம், சீப்பாலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட காற்றாலைகள் செயல்பட்டு வருகிறது.

தந்தி டிவி
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, ஜி. உசிலம்பட்டி, கண்டமனூர், ஆத்தங்கரைப்பட்டி, கோவிந்த நகரம், சீப்பாலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட காற்றாலைகள் செயல்பட்டு வருகிறது. தற்போது, தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கியதை தொடர்ந்து, இங்குள்ள காற்றாலைகளில் மின்உற்பத்தி தொடங்கி உள்ளது. காற்றின் வேகம் வினாடிக்கு 11 முதல் 12 மீட்டர் என்ற அளவில் வீசி வருகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் போது, தேனி மாவட்டத்தில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையில், ஒரு காற்றாலையில் ஒருநாள் மின்சார உற்பத்தி சராசரியாக 20 ஆயிரம் யூனிட் என்ற அளவில் உள்ளது. மின்தேவை குறைந்து காணப்படுவதால், காற்றாலை மின் உற்பத்தி தினமும் 3 மணி நேரம் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்