தமிழ்நாடு

தாயை கொன்ற மகன்- காரணம் என்ன?; மனநிலை பாதிப்பால் கொலை நடைபெற்றதா?

மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தவர் தனது தாயை கழுத்தை அறுத்து கொன்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தவர் தனது தாயை கழுத்தை அறுத்து கொன்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.கரூர் மாவட்டம் கணக்கபிள்ளையூர் பகுதியை சேர்ந்த முருகாயின் இளைய மகனான பொன்னுசாமி, கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டதாகவும் இதன் காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்து சிகிச்சை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்ற பொன்னுசாமி, அங்கே இருந்த அவரது தாயார் முருகாயியை தான் வைத்திருந்த சிறிய கத்தியால் திடீரென கழுத்தை அறுத்துள்ளார். இதில் படுகாயமடைந்த முருகாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’