தமிழ்நாடு

மதுகுடிக்க பணம் கேட்டு தராததால் ஆத்திரம் : தாயை வெட்டிக் கொன்ற மகன்

திருச்சி அருகே மதுகுடிக்க பணம் கேட்டும் தராத தாயை மகனே அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி
திருச்சி அருகே மதுகுடிக்க பணம் கேட்டும் தராத தாயை மகனே அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முசிறி அருகே திருத்தலையூர் கிராமத்தை சேர்ந்தவர் பச்சையம்மாள். இவரது மகன் ராஜாவிற்கு திருமணமாகி குழந்தை உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்து வாழ்கிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ராஜா, தனது தாயிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த ராஜா, அரிவாளால் தன் தாயை வெட்டி கொலை செய்தார். இதையடுத்து ராஜாவை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்