தமிழ்நாடு

மதுகுடிக்க பணம் கேட்டு தராததால் ஆத்திரம் : தாயை வெட்டிக் கொன்ற மகன்

திருச்சி அருகே மதுகுடிக்க பணம் கேட்டும் தராத தாயை மகனே அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி
திருச்சி அருகே மதுகுடிக்க பணம் கேட்டும் தராத தாயை மகனே அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முசிறி அருகே திருத்தலையூர் கிராமத்தை சேர்ந்தவர் பச்சையம்மாள். இவரது மகன் ராஜாவிற்கு திருமணமாகி குழந்தை உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்து வாழ்கிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ராஜா, தனது தாயிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த ராஜா, அரிவாளால் தன் தாயை வெட்டி கொலை செய்தார். இதையடுத்து ராஜாவை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்