தமிழ்நாடு

விபத்தில் சிக்கிய மகன்...உயிரோடு இருக்கிறாரா இல்லையா...மனு கொடுக்க வந்த தந்தை

தந்தி டிவி

திருவாரூ ர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டத்தை சேர்ந்தவர்கள் சௌந்தர்ராஜன் முத்துலட்சுமி தம்பதியினர். சௌந்தர்ராஜன் விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்களது மூன்றாவது மகன் மணிகண்டன் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு மலேசியா சென்றுள்ளார். இந்த நிலையில் கடைசியாக கடந்த 27 ஆம் தேதி வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் தனது அண்ணன் ஐயப்பனுக்கு அழைத்து குடும்பத்தில் உள்ள அனைவருடன் மணிகண்டன் பேசி உள்ளார். அதன் பிறகு கடந்த 30 ஆம் தேதி மணிகண்டன் விபத்தில் சிக்கியதாக தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது மணிகண்டன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என கண்டறிய முடியாத நிலையில் தனது மகனை மீட்டுத் தரக்கோரி அவரது தந்தை மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் அளிக்க வந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி