தமிழ்நாடு

பெற்ற தாயை தவிக்கவிட்ட மகனுக்கு 3 மாதம் சிறை - கலெக்டர் அதிரடி! | IAS

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே பெற்ற தாயை பராமரிக்க தவறிய மகனுக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்...

வாழவல்லான் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி இசக்கு மற்றும் மாலையம்மாள். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இசக்கி உயிரிழந்த பின்னர், அவரது மனைவி மாலையம்மாள் உரிய பராமரிப்பின்றி இருந்ததாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து, தனது மூத்த மகன் முத்துக்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாலையம்மாள் அளித்த புகாரின் பேரில், அவரது மகன் முத்துக்குமார் மாதந்தோறும் தனது தாயாருக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிடப்பட்டது. ஆனால், தற்போது மாலையம்மாளுக்கு, முத்துகுமார் பணம் வழங்காமல் இருப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் முத்துக்குமாருக்கு மூன்று மாதம் சிறை தண்டன விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்