தமிழ்நாடு

2 வயதிலேயே பெல்ஜியம் தம்பதிக்கு விற்பனை - "பெற்றோரை ஒரு முறையாவது.."

தந்தி டிவி

மதுரையை சேர்ந்த இளம் பெண், 2 வயதில் பெல்ஜியம் தம்பதிக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், பல ஆண்டுகளாக தமிழகத்தில் பெற்றோரை தேடி வருகிறார்.

சென்னை அண்ணா நகரில் இயங்கிய மலேசியன் சோசியல் சர்வீஸ் என்ற காப்பகம் மூலமாக பெல்ஜியத்தை சேர்ந்த பிலிப் - மேரி தம்பதிக்கு 2 வயதில், கடந்த 1994ல் விற்கப்பட்டவர் அருணா. பெல்ஜியத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர் ஆவணங்களின் அடிப்படையில் தனது தாயார் பெயர் சகுந்தலா என்பதையும், மதுரை பாளையம், கோனார் தெருவை சேர்ந்தவர் என்பதையும் கண்டறிந்துள்ளார். 6 ஆண்டுகளுக்கு முன்பு வழக்கறிஞர் அஞ்சலி பவார் உதவியோடு இந்தியாவிற்கு வந்து பெற்றோரை தேடி வரும் நிலையில், வளர்ப்பு தாய் இறந்துவிட்டதாகவும், தந்தைக்கும் வயதான நிலையில் தன்னை ஈன்றெடுத்த பெற்றோரை ஒரு முறையாவது சந்தித்து விட வேண்டும் என்ற கண்ணீருடன் தெரிவித்துள்ளார். .

Breaking | Jawahirullah | திமுக கூட்டணியில் எத்தனை சீட்? | முடிவை சொன்ன ஜவாஹிருல்லா

Breaking | DMK | IUML | முடிவானது கூட்டணி.. ஐயூஎம்எல்-க்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

Breaking | Iran | Israel | மத்திய கிழக்கில் சூழலும் போர் மேகம் | முக்கிய மீட்டிங்கில் மத்திய அரசு

Breaking | DGP | TN Govt | டிஜிபிக்கு கூடுதல் பொறுப்பு |தமிழக அரசு அதிரடி

BREAKING || "நாளை முதல்..." - தமிழக மக்களுக்கு பறந்த முக்கிய அலர்ட்