'ஆஷா' எனப்படும் சமூக சுகாதாரப் பணியாளர்கள், சம்பளம் வழங்கக் கோரி சென்னை தேனோம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு திட்டத்தின் கீழ், மலை கிராமங்களில் பணியாற்றும் தங்களுக்கு ஊக்கத்தொகை 600 ரூபாய் வழங்கப்படுவதை தவிர வேறெந்த பலன்களும் இல்லை என அவர்கள் வேதனை தெரிவித்தனர். போராட்டம் காரணமாக டிஎம்எஸ் வளாகத்தின் பிரதான நுழைவாயில் பூட்டப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.