தமிழ்நாடு

வீட்டிற்குள் நுழைந்த பாம்பை கடித்து குதறிய நாய்

திருவெறும்பூரில் வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள சாரை பாம்பை, செல்லப்பிராணியான நாய் கடித்து கொன்றது.

தந்தி டிவி
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், திருவெறும்பூரில் வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள சாரை பாம்பை செல்லப்பிராணியான நாய் கடித்து கொன்றது. இந்த சம்பவம், ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் என்பவரின் வீட்டில் நிகழ்ந்தது. வீட்டுக்குள் பாம்பு புகுந்த போது, உள்ளே இருந்த பெருமாளின் மகள், பயத்தில் அலறி அடித்துக்கொண்டு, வெளியே ஓடி வந்து விட்டார். சமயோசிதமாக செயல்பட்டு, பாம்பை கடித்து கொன்ற நாயை, பெருமாளும், அவரது குடும்பத்தினரும் வெகுவாக பாராட்டினர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ