தமிழ்நாடு

வீட்டிற்குள் நுழைந்த பாம்பை கடித்து குதறிய நாய்

திருவெறும்பூரில் வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள சாரை பாம்பை, செல்லப்பிராணியான நாய் கடித்து கொன்றது.

தந்தி டிவி
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், திருவெறும்பூரில் வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள சாரை பாம்பை செல்லப்பிராணியான நாய் கடித்து கொன்றது. இந்த சம்பவம், ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் என்பவரின் வீட்டில் நிகழ்ந்தது. வீட்டுக்குள் பாம்பு புகுந்த போது, உள்ளே இருந்த பெருமாளின் மகள், பயத்தில் அலறி அடித்துக்கொண்டு, வெளியே ஓடி வந்து விட்டார். சமயோசிதமாக செயல்பட்டு, பாம்பை கடித்து கொன்ற நாயை, பெருமாளும், அவரது குடும்பத்தினரும் வெகுவாக பாராட்டினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்