குற்றாலத்தில் உலா வந்த பாம்பு.. அலறிய சுற்றுலா பயணிகள்
சாலையில் உலா வந்த மலைப்பாம்பை மீட்ட தீயணைப்புத்துறையினர்
குற்றாலத்தில் மலை பாம்பு ஒன்று சாலையில் உலா வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றாலத்தில் இருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் மலைப்பாம்பு ஒன்று சுற்றி திரிந்ததை பார்த்த சுற்றுலா பயணிகள் அச்சத்தில் ஓடியுள்ளனர். இதனையடுத்து சுற்றுலா பயணிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற தென்காசி தீயணைப்புத் துறையினர் மலைப்பாம்பை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.