சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட அளவில் பரவலாக்கப்பட்ட மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கும் திட்டத்தின் கீழ், திருச்சி அச்சிடப்பட்ட மின்னணு குடும்ப அட்டைகளை 5 அட்டைதாரர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இரண்டு சேமிப்பு கிடங்குகள், கடலூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கட்டப்பட்ட சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி மூலம் திறந்து வைத்தார்.