தமிழ்நாடு

விண்ணை முட்டும் அரோகரா கோஷம்... பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

தந்தி டிவி

பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தெப்ப தேரோட்டம் நடைபெற்றது. முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, நாள்தோறும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், விழாவின் இறுதி நிகழ்ச்சியான தெப்ப தேரோட்டம், பெரியநாயகி அம்மன் கோவில் முன்பு தெப்பகுளத்தில் நடைபெற்றது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளினார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை