தமிழ்நாடு

சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு - இன்று பிற்பகல் உத்தரவு என நீதிமன்றம் அறிவிப்பு

சிறப்பு எ​ஸ்ஐ வில்சன் கொலையில் கைதான தீவிரவாதிகள் சமீம், தவுபிக் இருவரையும் போலீஸ் காவலில் விசாரிக்கும் மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது .

தந்தி டிவி

சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சமீம், தவுஃபீக் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை அனுமதி கோரியது. இந்த வழக்கில், தவுபீக், சமீம் ஆகிய இருவரும் நேற்று நாகர்கோவில் மாவட்ட அமர்வு நீதிபதி அருள் முருகன் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை தொடர்ந்து விசாரிப்பதற்காக 28 நாட்கள் போலீஸ் காவல் அளிக்குமாறு காவல்துறை தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டடது. இதையடுத்து, இருவரையும் போலீஸ் காவலில் அனுப்புவது குறித்து இன்று பிற்பகல் 3 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்