தமிழ்நாடு

நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜர்.. பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்

பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவை 15-நாள் நீதிமன்ற காவலில் செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

தந்தி டிவி

நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜர்.. பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்

பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவை 15-நாள் நீதிமன்ற காவலில் செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மாணவிகளிடம் அத்துமீறியதாக எழுந்த புகாரின் பேரில் சிவசங்கர் பாபாவை டெல்லியில் தமிழக சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர். நேற்றிரவு தமிழகம் அழைத்து வரப்பட்ட அவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவருக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உரிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு கேளம்பாக்கத்தில் உள்ள அவரது பள்ளிக்கு அழைத்துச் சென்ற சிபிசிஐடி போலீசார் உரிய ஆவணங்களை எடுத்துக் கொண்டு பின்னர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். அப்போது சிவசங்கர் பாபாவை 15-நாள் நீதிமன்ற காவலில் செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. முன்னதாக பலத்த பாதுகாப்புடன் சிவசங்கர் பாபா அழைத்து வரப்பட்டார். இதனிடையே பாபாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் முன்பாக மாணவர் அமைப்பினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு