தமிழ்நாடு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - 3வது வழக்கில் சிவசங்கர் பாபா கைது

பாலியல் புகாரில், 3வது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபாவை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தந்தி டிவி

பாலியல் புகாரில், 3வது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபாவை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.பாலியல் தொந்தரவு செய்ததாக முன்னாள் மாணவி உள்ளிட்டோர் அளித்த புகாரில், சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அடுத்தடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர், ஏற்கனவே, 2 முறை கைது செய்யப்பட்டு, செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், சிவசங்கரின் சீடர் சுஸ்மிதாவும் கைது செய்யப்பட்டார். பலர் முன்ஜாமின் பெற்றுள்ளனர். இதனிடையே, 3வது போக்சோ வழக்கில், சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் கைது செய்து செங்கல்பட்டு சிறப்பு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ