சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதால், தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கால் வேலையின்றி தவித்து வருவதாகவும், மண்பாண்ட பொருட்களை குறிப்பிட்ட நாட்களுக்குள் சூளையில் வைத்து சுடாவிட்டால் தயாரித்த பொருட்கள் அனைத்தும் சேதமாகி விடும் எனவம் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.