தமிழ்நாடு

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 2 பெண்கள் உள்பட 3 பேர் படுகாயம்

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி 2 பெண்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தந்தி டிவி

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி 2 பெண்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஆத்தூரில் அதிரூபன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில், திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த சுதா, சரஸ்வதி, கணேசன் ஆகிய மூவர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர், மேலும் தீ பரவாமல் தடுத்த‌தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு