தமிழ்நாடு

பேட்டி அளித்ததால் கொலை மிரட்டல் - சிவகங்கையில் அதிர்ச்சி | Sivagangai

தந்தி டிவி

சிவகங்கை அருகே குடிநீர் தட்டுப்பாடு குறித்து பேட்டியளித்தவருக்கு ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட நாட்டாக்குடி, இலந்தங்குடி கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருவதாக நாட்டாகுடியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் பேட்டி ஒன்றில் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இதற்கு, ஊராட்சி மன்றத் தலைவர் விமலாவின் கணவர் மணிமுத்து கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அச்சமடைந்த தங்கராஜ் கடந்த 2 நாட்களாக தலைமறைவாகி இருந்த நிலையில் சிவகங்கை எஸ்.பி. அலுவலகத்தில் தனக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் புகார் மனு அளித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்