சிவங்கங்கை மாவட்டம், எஸ்.ஆர். பட்டணம் கிராமத்தில் உள்ள காலகஸ்தீஸ்வரர் மற்றும் கருப்பர் ஆலயங்களில், மூன்று பேர் கொண்ட கும்பல் மணி, விளக்கு உள்ளிட்ட பொருள்களை திருடியுள்ளனர். இதில் இரண்டு பேர் தப்பிய நிலையில், மதுபோதையில் தூங்கிய ஒருவரை கிராம மக்கள் பிடித்து கை, கால்களை கட்டி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.