சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த அரியக்குடி அரசு பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பல்வேறு விதத்தில் சாதனை படைத்து வருகின்றனர். இந்நிலையில், அவர்கள் வீகோ சேட்டிலைட் என்னும் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தினர். இது சுமார் 20 கிலோமீட்டர் உயரம் பறந்து பூமியில் உள்ள மரங்கள் மற்றும் விவசாய நிலங்களை தாக்கும் பூஞ்சைகள் மற்றும் நோய்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 3 மணி நேரத்திற்குப் பின் மதுரை அருகே தரையிறக்கப்பட்டது. அரியக்குடி மாணவர்களின் இந்த சாதனை முன் மாதிரியாக செயல்படுவதுடன், பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.