தமிழ்நாடு

பாட்டியை சிறைபிடித்து தாயிடம் பணம் கேட்டு மிரட்டிய பொறியியல் பட்டதாரி

சிவகங்கை மாவட்டம் சுப்பிரமணியபுரத்தில் 80 வயது மூதாட்டியை சிறைபிடித்து வைத்து தாயிடம் பணம் கேட்டு தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

சிவகங்கை சுப்பிரமணியபுரம் பகுதியில் கணவனால் கைவிடப்பட்டு தனது இரண்டு பிள்ளைகளை படிக்க வைத்தார் ராதா என்ற பெண பொறியியல் பட்டதாரியான ராதாவின் மகன் சண்முகநாதன் வேலைக்கு செல்லாமல் தனது தாயிடமே பணம் வாங்கி செலவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை உடல்நலம் சரியில்லாத தனது பாட்டியான பேச்சுமுத்துவை வீட்டு சிறையில் வைத்து 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கேட்டு தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து இருவரையும் மீட்டுள்ளனர். பின்னர், சண்முகநாதனை புதுக்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாரா என விசாரணை செய்து வருகின்றனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு