தமிழ்நாடு

துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை - வங்கி பாதுகாப்பு பணியில் இருந்த போது விபரீதம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வங்கி ஒன்றில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

திருப்பத்தூரில் இயங்கி வரும் இந்தியன் வங்கியில், ஆயுதப்படை காவலரான யோகேஸ்வரன் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் வங்கியின் கழிவறைக்கு சென்ற அவர், திடீரென தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், யோகேஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு