தமிழ்நாடு

மூடப்பட இருந்த அரசு பள்ளியின் புது தோற்றம் - 8 மாணவர்கள் படித்த நிலையில் இன்று 67 ஆக உயர்வு

தமிழக அரசால் மூடப்பட இருந்த பள்ளிகளில் ஒன்றாக இருந்த அரசு பள்ளி இன்று கிராம மக்களின் முயற்சியால் புது பொலிவு பெற்றுள்ளது.

தந்தி டிவி

மாணவர் எண்ணிக்கை குறைந்ததால் தமிழகத்தில் மூடப்பட இருந்த இரண்டாயிரத்து 500 பள்ளிகளில் ஒன்றாக இருந்தது, சிவகங்கை மாவட்டம் மல்லாகோட்டை அரசு தொடக்கப்பள்ளி...

வெறும் எட்டு மாணவர்கள் மட்டும் படித்து வந்த இந்த பள்ளியில் கிராம மக்களின் முயற்சியால் தற்போது 67 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி மூடப்பட போவதாக செய்தி அறிந்த கிராம மக்கள், பள்ளியின் தலைமை ஆசிரியை அழைத்து பேசி, பள்ளிக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது தொடர்பாக திட்டமிட்டதோடு, சுமார் 15 லட்ச ரூபாய் செலவில் பள்ளியை புதுப்பித்தனர்.

ஸ்மார்ட் கிளாஸ் வசதி, வேன் வசதி என புத்துயிர் பெற்ற இந்த பள்ளி தற்போது தனியார் பள்ளிக்கு இணையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. அரசுப் பள்ளியின் அடிப்படைத் தேவைகள் தீர்வு காண இது போன்ற முயற்சிகள் இன்று அவசியமாயிற்று...

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்