தமிழ்நாடு

பெண்ணின் உடம்பில் சிக்கி கொண்ட ஊசி : அறுவை சிகிச்சை மூலம் அகற்ற நடவடிக்கை

சீர்காழியில் சிகிச்சை பெற்ற பெண்ணுக்கு மருந்து செலுத்தும் போது ஊசி உடைந்து உடம்பில் சிக்கி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

நாகை மாவட்டம் சீர்காழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பார்வதி என்ற பெண் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்றார். அவருக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தும் போது ஊசி உடைந்து உடம்பில் சிக்கி கொண்டது. இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து பார்வதிக்கு உடனடி சிகிச்சை அளிக்க மருத்துவ அதிகாரிகள் முடிவு செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனை ஊழியர்கள் சுகாதார துறை வாகனத்தில் அழைத்து சென்று திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பார்வதியை பரிசோதித்த மருத்துவர்கள் நாளை அறுவை சிகிச்சை மூலம் உடைந்த ஊசி அகற்றப்படும் என்று தெரிவித்தனர்.

TN Police | TVK | பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - சிக்கிய TVK நிர்வாகிகள் - விசாரணையில் அதிர்ச்சி

Minister VanniArasu | "ஆணவப் படுகொ*ல - தனி சட்டம் கொண்டு வர நடவடிக்கை" அமைச்சர் வன்னிஅரசு

Chennai | Koyembedu | TN Police | கோயம்பேடு கொ*ல.. விசாரணையில் பேரதிர்ச்சி திருப்பம்

Breaking | Karur Case | தமிழகத்தையே உலுக்கிய கரூர் வழக்கு | கொடூரர்களுக்கு இடியை இறக்கிய கோர்ட்

CM Vijay | Chennai | திருச்சி பிளானை மாஸாக முடித்துவிட்டு சென்னை திரும்பிய CM விஜய்