மதுரையில் இருந்து விமானத்தில் துபாய் செல்வதற்காக ஒரே ஒரு பயணி மட்டுமே இருந்த சூழலில், துபாய் விமானம் ரத்து செய்யப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் இருந்து காலை 11.30 மணியளவில் துபாய் செல்ல வேண்டிய ஸ்பைஜெட் விமானத்தில் ஒரே ஒரு பயணி மட்டுமே பயணம் செய்ய இருந்ததால், துபாய் விமான சேவை ரத்து செய்யப்பட்டதாக தெரியவருகிறது. மேலும், துபாய் செல்ல இருந்த அந்த பயணிக்கு வரும் 26ஆம் தேதி துபாய் செல்ல மாற்று ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.