தமிழ்நாடு

சித்த மருத்துவர் திருத்தணிகாச்சலத்துக்கு நிபந்தனை ஜாமீன் - எழும்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

சித்த மருத்துவர் திருத்தணிகாச்சலத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

சித்த மருத்துவர் திருத்தணிகாச்சலத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக வீடியோ வெளியிட்டதாக 2 வழக்குகளின் கீழ் தணிகாச்சலம் கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்தது. இந்த நிலையில், தனக்கு ஜாமீன் கோரி தணிகாச்சலம் தாக்கல் செய்த மனு, எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின்துரை முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் விளக்கத்தை ஏற்ற நீதிபதி, சென்னையை விட்டு வெளியேறக் கூடாது என நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கினார். தணிக்காச்சலம் மீது மேலும் இரு வழக்குகள் மற்றும் குண்டர் சட்டம் உள்ளதால், தற்போது சிறையில் இருந்து விடுதலையாக முடியாது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை