தமிழ்நாடு

சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு : ஆவணங்கள் என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைப்பு - விசாரணை அலுவலகம் விரைவில் துவக்கம்

சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் விசாரணை அலுவலகம் தக்கலையில் துவங்கப்பட உள்ளது.

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த மாதம் 8-ந் தேதி சிறப்பு எஸ்.ஐ. வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து கொலை செய்த அப்துல் ஷமீம் மற்றும் தவுபீக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்கள் 2 பேரையும் 10 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை செய்த போது அவர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் விசாரணைக்காக தக்கலையில் தற்காலிக அலுவலகம் ஒன்று துவங்கப்பட உள்ளது. இதற்கான பணிகளில் காவல்துறை மற்றும் என்ஐஏ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே