தமிழ்நாடு

வில்சன் கொலை வழக்கு : கொலையாளிகளுக்கு 3 நாள் நீதிமன்ற காவல்

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தமீம், தவுபிக் ஆகியோரை 3- நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தந்தி டிவி
குமரி மாவட்டம் களியக்காவிளை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் தமீம் மற்றும் தவுபிக் ஆகியோர் குழித்துறை குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஜெய்சங்கர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து அவர்களை 3 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட நடுவர், வரும் திங்கட்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதன்பின்னர், இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்க கொண்டு செல்லப்பட்டனர். முன்னதாக தீவிரவாதிகளுக்கு எதிராக வழக்கறிஞர்கள் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு நிலவியது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்