சென்னை அண்ணாநகர் 13வது பிரதான சாலையில் காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் என்பவர் செங்கற்களை தனது வாகனத்தில் எடுத்து சென்றதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்தில், இதுபற்றி கேள்வி எழுப்பிய இளைஞர்களிடம், சம்பந்தமே இல்லாமல் வேறு ஒரு விஷயத்தை பற்றி பேசியவாறே அவர் நழுவிச் சென்றதாக கூறப்படுகிறது.