தமிழ்நாடு

யூரியா உரம் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும்- வைகோ வலியுறுத்தல்

யூரியா உரம் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும் என்று மத்திய - மாநில அரசுகளுக்கு வைகோ வலியுறுத்தியுள்ளார்

தந்தி டிவி
யூரியா தட்டுப்பாடின்றி கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆண்டு ஐந்தரை லட்சம் டன் யூரியா தேவைப்படும் நிலையில் 60 சதவீதம் அளவுக்கு மத்திய அரசு வழங்குவதாக சுட்டிக்காட்டி உள்ளார். ஸ்பிக் உள்ளிட்ட நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ள நிலையில் தற்போது யூரியா தட்டுப்பாடு அதிகரித்து உள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார். 60 முதல் 70 ரூபாய் அதிகம் விலை கொடுத்து விவசாயிகள் தனியாரிடம் உரங்களை வாங்க வேண்டிய நிலை உருவாகி வருவதாக தெரிவித்துள்ள வைகோ கண்காணிப்பு நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை