தமிழ்நாடு

நாளை வணிக வளாகங்கள் திறப்பு - வழிகாட்டுதல் அரசாணை வெளியீடு

தமிழகம் முழுவதும் நாளை வணிக வளாகங்கள் திறக்கப்பட உள்ள நிலையில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி

அதில் வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிந்திருப்பது கட்டாயம் குறைந்தது 6 அடி தூரத்தில், சமூக இடைவெளி அவசியம் என கூறியுள்ளது. வாடிக்கையாளர்கள் உள்ளே வரவும் வெளியே செல்லவும் தனித்தனி வாசல்கள் இருக்க வேண்டும் என்றும், நோய் அறிகுறி உள்ளவர்களை அனுமதிக்க கூடாது என கூறியுள்ளது. வணிக வளாகங்களில் இசை உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியும் நடத்த கூடாது என்றும், கழிப்பறைகளை ஒரு நாளைக்கு 6 முறை சுத்தப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி குறைந்தது 50 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், மால்களில் உள்ள உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்