தமிழ்நாடு

மீனாட்சி அம்மன் கோயிலின் உள்ளே 51 கடைகளை திறக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உள்ளே உள்ள 51 கடைகளை திறக்க அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து கோயிலின் உள்ளே இருந்த கடைகள் அகற்றப்பட்டன. இந்த நிலையில் கடைகளை திறக்க அனுமதி கோரி கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், கோயிலின் உள்ளே இருக்கும் 51 கடைகளை திறக்க அனுமதி அளித்தார். மேலும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை கடைகளை வைத்துக்கொள்கிறோம் என உறுதி மொழி பத்திரம் அளிக்கவும், நிலுவையில் உள்ள வாடகை பாக்கியை செலுத்தவும் நிபந்தனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை