தமிழ்நாடு

சோளிங்கரில் குளத்தில் வீசப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள்

சோளிங்கரில், உள்ள ஒரு குளத்தில் கட்டுக்கட்டாக வாக்காளர் அடையாள அட்டைகள் கொட்டப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி
வேலூர் மாவட்டம் சோளிங்கர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் பின்புறம் உள்ள குளத்தில் கட்டுகட்டாக தமிழக அரசால் வழங்கப்படும் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் அடையாள அட்டைகள் கொட்டப்பட்டு இருந்தது. அதேபோல் நூற்றுக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகளும் அங்கு வீசப்பட்டு இருந்தது. பொது மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய இந்த அடையாள அட்டைகளை வீசிச் சென்றது யார் என விசாரணை மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூரில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குளத்தில் வாக்காளர் அடையாள அட்டைகள் வீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை