தமிழ்நாடு

வறண்டு போன சோழவரம் ஏரி..

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான சோழவரம் ஏரி வறண்டதால், அங்கிருந்து மோட்டார் மூலம் தண்ணீர் அனுப்பும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

தந்தி டிவி

இதனால், சென்னை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகரின் குடிநீர் தேவையை செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் ஆகிய ஏரிகள் பூர்த்தி செய்கின்றன. இந்நிலையில் ஆயிரத்து 81 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரி வறண்டு, சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. எனவே, அங்கிருந்து மோட்டார் மூலம் புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்பும் பணிகள், காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளன. தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க, ஆந்திர அரசுடன் தமிழக அரசு பேசி, கிருஷ்ணா நதி நீரை பெற முயற்சிகள் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு