தமிழ்நாடு

ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை - நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சிகள்

நெல்லை டவுனில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

தந்தி டிவி

நெல்லை பழையபேட்டையை அடுத்த சர்தார் புரத்தைச் சேர்ந்தவர் சுடலை. ஆட்டோ டிரைவரான இவர், கடந்த 3ஆம் தேதி இரவு நெல்லை டவுன் ஆர்ச் அருகே மர்ம நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்டார். சம்பவம் தொடர்பாக டவுன் போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்த வந்த நிலையில், கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை சர்தார் புரத்தைச் சேர்ந்த முருகன் என்ற பெயரையுடைய இருவர் சேர்ந்து, சுடலையை வெட்டி கொலை செய்தது, விசாரணையில் தெரியவந்தது. இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் என்பவருடைய மனைவியுடன் ஏற்பட்ட தவறான தொடர்பால் சுடலை வெட்டி கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, சிசிடிவி கேமராவில் பதிவான பதறவைக்கும் இந்த கொலை சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. அரிவாளால் பல முறை வெட்டியும், சுடலை உயிரை காப்பாற்றி கொள்ள கடுமையாக போராடுவதும், சாலையில் செல்பவர்கள் அவரை காப்பாற்றாமல் செல்வதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை