சென்னையில் பேட்டி கொடுத்தவர் கொலையில் திடுக் தகவல்.. கொலை பின்னணியில் 2 பெண்கள்?
கொலையாளிகளை கைது செய்யக் கோரி சாலை மறியல் சென்னை திருவொற்றியூரில் மகனை கொன்ற வழக்கில் மேலும் சில குற்றவாளிகளை கைது செய்யக்கோரி தாய் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கந்துவட்டி தொடர்பாக போலீசில் புகார் அளித்த பிரதீப் ராஜ் என்பவர் மறுநாளே மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் சில குற்றவாளிகள் மற்றும் 2 பெண்களை கைது செய்ய வலியுறுத்தி, பிரதீப் ராஜின் தாய் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.