3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமையால் உயிரிழப்பு - உதயநிதி கண்டனம் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து புதரில் வீசப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்து வருவதாகவும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பில் அரசு தோல்வி அடைந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் காவல்துறை உயர்நிலை கூட்டம் நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.