தமிழ்நாடு

திடீரென மாயமான சிறுவன் செப்டிக் டேங்க் தொட்டியில் சடலமாக கிடந்த அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழக்குடியிருப்பை சேர்ந்த மணிகண்டன் மகன் சந்தோஷ். பத்தாம் வகுப்பு மாணவரான இவர் நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவர் இரவில் திடீரென காணாமல் போனார். சந்தோஷை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் தந்தை புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தேடிவந்த நிலையில், விருத்தகிரி என்பவரது வீட்டின் பின்புறம் கட்டப்பட்டு வந்த செப்டிக் டேங்க் தொட்டியில் சந்தோஷ் சடலமாக மிதப்பதாக தகவல் வந்தது. அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் செப்டிக் டேங்கில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாரேனும் சிறுவனை கொலை செய்து தொட்டியில் போட்டார்களா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை