தமிழ்நாடு

ஹோட்டலில் தூங்கிக் கொண்டு இருந்தவர்களுக்கு ஜெனரேட்டரால் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

தந்தி டிவி

கத்திப்பாரா அருகே தனியார் விடுதியில் இருந்த ஜெனரேட்டர் ஒன்றில், தீடிரென ஏற்பட்ட புகையால் 8 பேருக்கு ​மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த கத்திப்பாரா ஜி.எஸ்.டி சாலையில் தனியார் விடுதி ஒன்று அமைந்துள்ளது. இதில் நேற்று இரவு மின்சாரம் தடைபட்டதால் ஜெனரேட்டர் உதவியுடன் மின்சாரம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது ஜெனரேட்டரில் இருந்து தீடிரென ஏற்பட்ட புகையால், 8 பேருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து வந்த போலீசார், தீயணைப்பு துறையினரின் உதவியுடன் பாதிக்கப்பட்டவர்களை​ மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விசாரணையில் மின்கசிவு காரணமாக புகை​ ஏற்பட்டது தெரியவந்தது. 

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு