Tiruvannamalai | Girivalam | கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு அதிர்ச்சி #Tiruvannamalai #Girivalam #thanthitv திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கழிவுநீர் செல்வதால், கிரிவலம் செல்லும் பக்தர்கள் கழிவுநீரில் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.. திருவண்ணாமலை செங்கம் சாலை மற்றும் வ.உ.சி நகர் சாலை சந்திப்பில் பல மாதங்களாகவே அவ்வப்போது பாதாள சாக்கடை அடைத்து கழிவுநீர் சாலைகளில் ஆறாக ஓடி வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொள்ளும் பக்தர்கள் இந்தக் கழிவு நீரில் நடந்து சென்று கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொள்ளும் அவல் நிலை உருவாகி உள்ளது. திருவண்ணாமலையில் பாதாள சாக்கடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.