தமிழ்நாடு

காவலரே களவாணியான அதிர்ச்சி..! கைதிகளின் சம்பளம் சுருட்டல்

தந்தி டிவி

காளையார் கோவில் அருகே உள்ள புரசடை உடைப்பு திறந்தவெளி சிறையில் கைதிகளுக்கு தரவேண்டிய சம்பள பணத்தை கையாடல் செய்த புகாரில் காவலர் அலெக்ஸ் பாண்டியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மதுரை மத்திய சிறை நிர்வாகத்தின் கீழ் உள்ள காளையார்கோவில் திறந்தவெளி சிறையில், நன்னடத்தை அடிப்படையில் கைதிகள் விவசாய பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்காக தினமும் சம்பளம் வழங்கப்படுகிறது. சமீபத்தில் நடந்த தணிக்கை ஆய்வில், விடுதலையாகி சென்ற கைதிகளுக்கு சம்பளம் வழங்காதது தெரியவந்தது. இது குறித்து மதுரை சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் விசாரித்த போது, சம்பளம் வழங்கும் பணியை கவனித்த காவலர் அலெக்ஸ் பாண்டியன் 2 லட்சம் ரூபாய் வரை கைதிகளுக்கு தராமல் தன் தேவைகளுக்கு பயன்படுத்தியது தெரியவந்தது. இதைதொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை