கொளஞ்சி என்பவர் ஒரு இனிப்புக்கடையில் பக்கோடா வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது, பக்கோடாவிற்குள் வித்தியாசமாக ஏதோ தென் படவே, கையில் எடுத்துப் பார்த்த போது, அது சொத்தைப்பல் என்பதையறிந்து கொளஞ்சி அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக அவர் கடை விற்பனையாளரிடம் இது குறித்து கேட்கவே, அவர் உரிய பதிலளிக்கவில்லை என்று தெரிகிறது. இது சம்பந்தமான காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரபட்டு வருகின்றன. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.