தமிழ்நாடு

அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய விவகாரம்: மத்திய கப்பல் போக்குவரத்து துறை செயலருக்கு நோட்டீஸ்

மத்திய கப்பல் போக்குவரத்து துறை செயலாளர் மற்றும் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக சபை கழக தலைவர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

அயல் நாடுகளுக்கு பாறாங்கற்களை ஏற்றுமதி செய்ய தூத்துக்குடி வ.உ சி. துறைமுகம் வழியாக கொண்டு செல்வதற்கான கட்டணம் வசூலிப்பதில் வருடத்திற்கு 3 புள்ளி 39 கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஸ், என்.சதிஷ் குமார் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் அரசுக்கு, அதிகாரிகள் வருவாய் இழப்பு ஏற்படுத்தி வருவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை