தமிழ்நாடு

எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு நிலக்கரி ஏற்றி வந்த கப்பல் ஊழியரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார்

எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு நிலக்கரி ஏற்றி வந்த கப்பல் ஊழியரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

தந்தி டிவி

எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு நிலக்கரி ஏற்றி வந்த கப்பல் ஊழியரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. ஒடிசா மாநிலம் பாரதீப் துறைமுகத்தில் இருந்து மார்ச்13 ஆம் தேதி சென்னை எண்ணூர் துறைமுகத்திற்கு நிலக்கரி ஏற்றிக் கொண்டு விஷ்வ விஜய் என்ற கப்பல் வந்துள்ளது. மத்திய அரசு நிறுவனத்திற்கு சொந்தமான இந்த கப்பலில் பணியாற்றிய உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த தலைமை இயந்திர அதிகாரி நரேஷ்குமாரை 14 ஆம் தேதி முதல் காணவில்லை என கூறப்படுகிறது. கப்பல், எண்ணுார் துறைமுகம் வந்தடைந்ததும் முழுமையாக சோதனை நடத்தப்பட்டது. கப்பலில் நரேஷ் குமார் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மீஞ்சூர் காவல் நிலையத்தில் கப்பல் நிறுவன மேலாளர் புகார் அளித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்