தமிழ்நாடு

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - தமிழ் ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது...

நெல்லையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தந்தி டிவி
நெல்லை வள்ளியூரில், அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் நாகர்கோவிலை சேர்ந்த டேவிட் என்பவர் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அங்கு படிக்கும் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்திற்கு வந்த புகாரின் பேரில் அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தினர். அதில் தமிழாசிரியர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் அளித்த புகாரின் பேரில், டேவிட்டை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்த போலீசார், வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்