தமிழ்நாடு

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - தமிழ் ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது...

நெல்லையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தந்தி டிவி
நெல்லை வள்ளியூரில், அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் நாகர்கோவிலை சேர்ந்த டேவிட் என்பவர் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அங்கு படிக்கும் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்திற்கு வந்த புகாரின் பேரில் அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தினர். அதில் தமிழாசிரியர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் அளித்த புகாரின் பேரில், டேவிட்டை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்த போலீசார், வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ