தமிழ்நாடு

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - தமிழ் ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது...

நெல்லையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தந்தி டிவி
நெல்லை வள்ளியூரில், அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் நாகர்கோவிலை சேர்ந்த டேவிட் என்பவர் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அங்கு படிக்கும் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்திற்கு வந்த புகாரின் பேரில் அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தினர். அதில் தமிழாசிரியர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் அளித்த புகாரின் பேரில், டேவிட்டை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்த போலீசார், வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை