தமிழ்நாடு

6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் - அதிரடி காட்டிய நீதிமன்றம்

தந்தி டிவி

6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லையளித்த பள்ளி தலைமையாசிரியருக்கு இரட்டை ஆயுள், 47 வருட சிறை.69 ஆயிரம் அபராதம்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் 6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமையாசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 47 வருட சிறைதண்டனை ரூ69 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு அரசு சார்பில் ரூ29 லட்சம் இழப்பீடு வழங்கவும் போக்சோ நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காளையார்கோவிலை அடுத்துள்ள பெரியநரிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 2015 ஆம் ஆண்டு தலைமையாசிரியராக பணிபுரிந்து வந்தவர் முருகன். இவர் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு பயின்றுவந்த சிறுமிகள் 6 பேருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவகங்கை அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கானது சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அந்த வழக்கில் தலைமையாசிரியர் முருகன் மீதான குற்றம் நிருபீக்கப்பட்ட நிலையில் அதற்கான தீர்ப்பை நீதிபதி சரத் ராஜ் உத்தரவிட்டார். அதில் தலைமையாசிரியர் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் 47 ஆண்டு சிறை தண்டனையும் அதனை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டதுடன் ரூ69 ஆயிரம் அபராதமும் விதித்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு ரூ29 லட்சம் இழப்பீடும் அரசு தரப்பில் வழங்கவும் உத்தரவிட்டார். 6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தலைமையாசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் 47 வருட சிறை தண்டனையும் ரூ69 ஆயிரம் அபராதமும் விதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே