தமிழ்நாடு

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, 10 ஆண்டு சிறை

கிருஷ்ணகிரியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் சின்ன எலசகிரி கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவர், கடந்த 2015ஆம் ஆண்டு அதே பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்து 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததை தொடர்ந்து, சிறுமியின் தாயார், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, பாஸ்கர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்கு கிருஷ்ணகிரி விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், பாஸ்கர் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார். குற்றவாளி பாஸ்கருக்கு பாலியல் வன்கொடுமைக்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ