தமிழ்நாடு

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை புகார் : சிறப்பு டிஜிபி மீதான வழக்கு... 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக, சிறப்பு டிஜிபி மீது தொடரப்பட்ட வழக்கில், 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.

தந்தி டிவி

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக, சிறப்பு டிஜிபி மீது தொடரப்பட்ட வழக்கில், 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.சிறப்பு டிஜிபி, பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை தந்ததாக தொடரப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இதனிடையே, வழக்கில் காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டு இருப்பதால், வழக்கை, சிபிஐக்கு மாற்றுமாறு சென்னையை சேர்ந்த ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்.பி. மனு அளித்து இருந்தார். இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி தலைமையிலான அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பாக 50 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டு உள்ளதாகவும், வீடியோ ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளதாகவும் அரசு தெரிவித்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்