தமிழ்நாடு

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை புகார் : சிறப்பு டிஜிபி மீதான வழக்கு... 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக, சிறப்பு டிஜிபி மீது தொடரப்பட்ட வழக்கில், 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.

தந்தி டிவி

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக, சிறப்பு டிஜிபி மீது தொடரப்பட்ட வழக்கில், 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.சிறப்பு டிஜிபி, பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை தந்ததாக தொடரப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இதனிடையே, வழக்கில் காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டு இருப்பதால், வழக்கை, சிபிஐக்கு மாற்றுமாறு சென்னையை சேர்ந்த ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்.பி. மனு அளித்து இருந்தார். இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி தலைமையிலான அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பாக 50 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டு உள்ளதாகவும், வீடியோ ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளதாகவும் அரசு தெரிவித்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை