தமிழ்நாடு

பாலியல் தொல்லை புகார் விவகாரம்...சென்னை உயர் நீதிமன்றம் ரத்து ...

தந்தி டிவி

பாலியல் புகாரில், கோவை பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் மணிமேகலன் சஸ்பெண்ட் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில், சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர் மணிமேகலன் மீது, இரு பெண் உதவி பேராசிரியர்கள், பாலியல் தொல்லை புகார் அளித்ததைத் தொடர்ந்து, பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனை ரத்து செய்யக்கோரி, மணிமேகலன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார், முழுமையாக விசாரணை நடத்தி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மட்டுமே பணியிடை நீக்கம் செய்ய முடியும் எனவும், ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை வைத்து பணியிடை நீக்கம் செய்தது தவறு எனக்கூறி, சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்தார். அதேபோல், பாரதியார் பல்கலைக்கழகத்தில் மூத்த பெண் பேராசிரியர்கள் பலர் இருக்கும் நிலையில், இளையோரை கொண்ட உள் புகார் குழு அமைத்தது தவறு என கூறிய நீதிபதி, சட்டப்படி குழுவை மாற்றியமைத்து விசாரணை நடத்தி பல்கலைக்கழகத்திடம் அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டார்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு