தமிழ்நாடு

12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 66 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை

முதியவருக்கு ஆயுள் மற்றும் கூடுதலாக 7 ஆண்டுகள் சிறை - திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் திருவாலாங்காடு அருகே 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 66 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் கூடுதலாக 7 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து அம்மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராஜ்குமார் என்ற முதியவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். சிறுமியால் படிப்பை தொடர முடியாததால், ராஜ்குமாருடன் ஆடு மேய்ப்பதற்கு சென்றுள்ளார். அப்போது சிறுமியை மிரட்டி பலமுறை உடலுறவு கொண்டுள்ளார். இந்நிலையில் சிறுமி 6 மாதம் கர்ப்பிணியாக இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து நடைபெற்று வந்த வழக்கில் ராஜ்குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் கூடுதலாக 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்